Visitors

free hit counter

Saturday 5 August 2023

புலம்பல்கள்-1


தேடித் திரிந்து வினையற்று 
 பாடிப் பறந்து பற்றற்று 
 காணக் கிடைக்கா ஒளி கண்டு 
 காலம் கடந்தேன் எனை வென்று! 

 தனியே அமர்ந்து சிந்தித்து சிந்தித்து 
 சிறைப்பட்டு இறுதியில் 
 உனை சந்தித்து 
 சரணடைந்தேன்! 

 ஓயாத எண்ணத்தை ஓட விரட்டி 
 தேயாத மதி போல 
 ஒரு வடிவமாக்கி 
 போராட்டம் ஏதுமின்றி 
 என்னுள் என்னை நான் கண்டேன்!

Sunday 8 March 2015

யாரவளோ


உன் ஊரென்ன
உன் பேரென்ன
ஏதொன்றும்
என் காதல் அறியாதே

சிறு கண்ணாலே
எனை சிறை வைத்தாய்
என் கால்கள்
உன் பாதை அறியாதே

பெண்ணே! பெண்ணே!
உன்னாலே
என்னோடு
நித்தம் நித்தம்
போர் தான்....

வழி தேடி
அலைகின்றேன்
உன்னை பெற்ற
ஊர்தான்....

நீ நிலவா
மழையா
வாசப் பூவா
தேடி இங்கு
நான் தொலைந்தேன்...

என்னுயிரே! என்னுயிரே!
எனை வந்து சேராயோ
என் வாழ்க்கை நீயே தானே

ஒரு பொய் மானையே
இங்கு நான் தேடினேன்
இன்று நடுகாட்டில்
தவித்து நின்றேன்....

Sunday 1 March 2015

உடும்பு


மனம் ஒரு குரங்காம்
இடத்திற்கு இடம் மாறும்
என் மனம் மட்டும்
உடும்பை போல
பிடித்து கொண்டிருக்கிறதே
உன்னை....

அம்மன் சிலை


காதல் எனும்
கோவிலில்
புதியதாய் பிரதிஷ்டை
செய்யப்பட்ட
அம்மன் சிலை நீ.....

Sunday 15 February 2015

வாழ்த்த வந்த தேவதை


உள்ளுக்குள்ளே பத்திரமாய் உருவானவள்
உயிரோடு என்னுடனே உறவானவள்
ஒரு கோடி ஆண்டு வாழ்த்த
வந்த தேவதை அவள்
பல நூறு ஜென்மம் வாழ்க்கை
தந்த பூமகள் அவள்
செந்தமிழை போல நீயும்
என்னை வந்து சேர வேண்டும்...
கண்ணுக்குள்ளே மணியைப்
போல சேர்ந்து வாழணும்...

காதல் முகவரி


நம் ஒவ்வோர்
சந்திப்பிலும்
தொலைந்து போகும்
எனக்கு!

காதல் உலகிற்கு
முகவரி தந்து
அனுப்பிவிடுகிறது
உன் கண்கள்....

காதல் வாழ்க


இன்று
என் காதல் தோற்று
உன் காதல் வாழ்கிறது

இந்த காதல் மட்டும்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது
யாரிடமாவது...