Visitors

free hit counter

Monday, 19 January 2015

பேரழகி


நடக்கும் நடையினில்
என்னில் உடைகிறேன்
உந்தன் இடையினில்
என்னை இழக்கிறேன்
உரசிப் போகிடும்
ஆடைதனில்
எந்தன் ஆயுள்
கரைக்கிறேனே!..

பார்க்கும் பார்வையில்
ஆசை பதிக்கிறாய்
சிரிக்கும் சிரிப்பினில்
உயிரை பறிக்கிறாய்
காதல் கொடுத்தென்னை
காவு கேட்கிறாய்
வாழ்க்கை இனித்திடுதே..

உந்தன் விழி இங்கு
தூண்டில் முள்ளாய்
என்னை இழுக்கிறதே
பிறந்த பலனை
அடைந்தது போலே
உள்ளம் குதிக்கிறதே

உந்தன் அழகினிலே
தினமும் செத்து பிழைத்தேனே...

No comments: