Visitors

free hit counter

Wednesday 21 January 2015

தேவதை சரணாலயம் - 3


கோவில் மாடங்களில்
தங்கிப் போகும்
புறாவைப்போல
நானும் உன் இதயத்தில்
தங்கி விட்டு
போகிறேனே?...
----------------------------------------------------------------
நான்
கண்ணாடி முன் சொல்லி
ஒத்திகைப் பார்த்த
என் காதல்
உன் முன்னே வந்ததும்
உடைந்து
நொறுங்கி போனது...
---------------------------------------------------------------
நீ விழுங்கும்
எச்சிலில் தெரிந்தது
எனக்காய்
மறைக்கப்பட்ட
உன் காதல்.....
---------------------------------------------------------------
எறும்பு சேமித்தது
மழை காலங்களில்
உயிர் வாழ உதவுவது போல
நீ என்னை விட்டு
பிரிந்து செல்கையில்
உன் நினைவுகள்
நான் வாழ
உதவுகின்றன...
--------------------------------------------------------------

No comments: