Visitors

free hit counter

Sunday, 25 January 2015

முதல் இரவு


பசியோடு இதழும்
உன் உயிரில் உலவும்,
காதல் போரில் காமம்
வெல்லும் காதலியே...
காற்றில் கூட கள்
வடியும் கண்மணியே...

உன் முத்த தேனும்
என் உடலில் வழியும்,
விரதம் முடித்து விரகம்
எடுக்கும் நேரமிது...
உயிரை உருக்கி உனக்கு
கொடுக்கும் காலமிது...

விடியாத இரவும்
விலகாமல் இருக்கும்,
கடவுள் கொடுத்த கலவி
முழுதும் கால் பதிப்போம்...
உயிரை துளைத்து உயிரை
படைக்க சூள் உரைப்போம்...

நிலவாக நீயும்
ஒளியாக நானும்
ஒன்றாக இணைய
காதல் வந்து
வரம் கொடுக்க...

No comments: