Visitors

free hit counter

Tuesday 27 January 2015

சொல்ல வேண்டிய கதை-5


சத்யா மெல்ல கண் விழித்து பார்க்கிறான்...
அது ஒரு மாட்டு தொழுவம்.
நாலு அஞ்சு தடியான மனிதர்கள் நிற்கிறார்கள், கூடவே ஒருவர் நாற்காலியில் அமர்ந்தவாறு

"டேய், அவன் முழிச்சிட்டான் இப்போ கேளுங்கடா"

ஒருவன் வந்து" டேய் திவ்யா எங்கடா?"

சத்யா"யாருங்க நீங்க? சத்தியமா எனக்கு அவுங்க எங்கனு தெரியாது"

நாற்காலியில் அமர்ந்திருந்தவர்" நான் தான் திவ்யா அப்பா, ஹாஸ்டலில் எல்லாரும் உன் பேர்தான் சொல்றாங்க,
உன்னையத்தான் திவ்யா லவ் பண்ணதா சொல்றாங்க, மரியாதையா பொண்ணு எங்கனு சொல்லு"

சத்யா " சார், என்ன நம்புங்க எனக்கு ஒண்ணுமே தெரியாது"

"நீ இப்படி எல்லாம் கேட்டா சொல்ல மாட்ட"

"ஹையோ புரிஞ்சுக்கோங்க எனக்கு சந்தியாவதான் நல்லா தெரியும்"

உடனே திவ்யா அப்பா சந்தியாவை அழைக்கிறார்.

தி.அப்பா " சந்தியா, இங்க வாமா"

சந்தியா" என்ன அங்கிள்"

தி.அப்பா" என்னமா இவன் உன்னையாதான் நல்லா தெரியும்னு  சொல்றான்"

சந்தியா" திவ்யாதான் இவன அறிமுக படுத்தி வச்சா, எனக்கு இவன சுத்தமா பிடிக்கல, நான்கூட
திவ்யாகிட்ட அடிக்கடி சொல்லிருக்கேன் அங்கிள், அவதான் கேட்கல"

தி.அப்பா"ஏன்மா இத நீ அப்பவே சொல்லிருந்தா இவ்ளோ நடந்திருக்குமா"

சந்தியா"இல்ல அங்கிள், நான் அப்பவே சொல்லிரலாம்னு தான் இருந்தேன், திவ்யா தான் நீ சொன்ன நான்
செத்துடுவேன்னு மிரட்டுனா...அதான்...."

தி.அப்பா"சரிமா, நீங்க ஹாஸ்டலுக்கு போங்க...நான் பாத்துக்கிறேன்"

சந்தியா"சரி அங்கிள்"

சந்தியா சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறாள்.
தி.அப்பா" டேய் தம்பி, நீ உண்மைய சொல்லல சாகமாட்ட, ஆனா சாகுற வரை வலிக்கும். பாத்துக்கோ"

சத்யா " சார்,  புரிஞ்சிக்கோங்க எனக்கு எதுமே தெரியாது"

தி.அப்பா" நீ சரிபட்டு வர மாட்ட"   சற்று திரும்பி தடியன்களிடம்,

தி.அப்பா" டேய், நான் போய் கமிஷனரை பாத்துட்டு வரேன், அதுக்குள்ள உண்மைய வரவைங்கடா"

சொல்லிவிட்டு கிளம்ப, அவர்கள் சத்யாவை நோக்கி செல்கிறார்கள்.

சத்யா " பிளீஸ், என்ன விட்டுடுங்க எனக்கு ஒண்ணும் தெரியாது"

அவர்கள் சத்யாவை போட்டு அடிக்கிறார்கள்..

சத்யா மீண்டும் மயங்கி விடுகிறான்.

சத்யா மனதில் " திவ்யா கிடைக்குற வர என்ன கொல்ல மாட்டாங்க, ஆனா தினமும் இந்த இம்சைய
அனுபவிக்கனும், அதுக்கு பதிலா நாம திவ்யா கண்டு பிடிச்சி உண்மைய தெரிஞ்சுக்கணும், அதுக்கு
நாம இங்கிருந்து தப்பிக்கணும்" என்று முடிவெடுத்து எழுந்து ஓட ஆரம்பிக்கிறான்.

அவன் மயங்கிவிட்டான் என்று நினைத்து மிதப்பாக இருந்த தடியன்களும்
சத்யாவை துரத்த ஆரம்பிக்கிறார்கள்...

-தொடரும்

No comments: