Visitors

free hit counter

Sunday, 11 January 2015

வெறுக்காதே பெண்ணே


பூக்கள்  சுடுகிறதே
காற்றுமே  புயலாய்  வருகிறதே
மழைத்துளி  என்னில்  விழுந்து
மண்ணில்  கரைக்கிறதே

காதல்  இதுதானா
தினம்  தினம்
சாவது  விதிதானா
இதயத்தை  அமிலம்  ஊற்றி
கழுவுவது  சரிதானா

எந்தன்  நிலா  வார்த்தைபட்டு
இன்று  நூறாய்  உடைகிறதே
நெஞ்சம்  கொஞ்சம்  கொஞ்சம்
கரைந்து  கடலில்  கலக்கிறதே  
நினைவுகள்  தீயாய்  சுட்டதே

சரிதானா  காதல்  சரிதானா
நீயுமின்றி  வாழ்வது  சரிதானா

அழியாத  காலம்  எல்லாம்
கழுவேறி  மடிகிறதே
அது  போலத்தானே  அன்பே
உயிர்போக  தவிக்கிறதே

மலை  பாரம்  தாங்கும்
என்  இதயம்  இன்று  வலிக்கிறதே
வெறுக்காதே  பெண்ணே  என்
நரம்பும்கூட  தெரிக்கிறதே

வேர்வைப்போல  உதிரம்  இறங்கும்
நீ  எந்தன்  பக்கம்  இல்லையேல்

பிழைதானா  காதல்  பிழைதானா
நீயுமின்றி  வாழ்வது  பிழைதானா

கண்கள்  அழுகிறதே
காதலி  சுவாசம்  திணர்கிறதே

மடியினில்  எந்தன்  உயிரும்
சாக  துடிக்கிறதே....

No comments: