Visitors

free hit counter

Wednesday 21 January 2015

தேவதை சரணாலயம் - 2


கருப்ப சாமிக்கு
நேர்ந்து விட்ட
ஆட்டைப் போல
நான் உனக்காக
நேர்ந்துவிட்டவன்.
-----------------------------------------------------------------
உனக்கு பிடித்த
எல்லாவற்றையும்
நானே தேர்ந்தெடுத்தேன்
என்னை மட்டும்
தேர்ந்தெடுக்கும் உரிமையை
உன்னிடமே
விட்டுவிட்டேன்..
-----------------------------------------------------------------
நீ திட்டும்
முட்டாள் என்ற
வார்த்தைக்காகவே
நான்
முட்டாளாய்
பிறந்திருக்கலாம்.
----------------------------------------------------------------
நீ
மெய்மறந்து கேட்கும்
ஒவ்வொரு இசையிலும்
என் காதல்
கசிந்துக் கொண்டுதான்
இருக்கிறது...
----------------------------------------------------------------
நீ யாருக்கோ செய்த
அர்ச்சனையில்
வாய்தவறி
என் பெயரை கூறிவிட்டு
நாக்கைக் கடிக்கும் போதுதான்
தெரிந்தது ...
நீயும் என்னை காதலிக்க
ஆரம்பித்து விட்டாய் என்று....
-----------------------------------------------------------------

No comments: