Visitors

free hit counter

Wednesday 21 January 2015

எங்கே விட்டு சென்றாய் அன்பே


கனா காணும்
என் இரவினில் தேடுகிறேன்
மழை தரும்
என் கண்களில் தேடுகிறேன்
உன்னை எண்ணும்
என் நெஞ்சத்தில் தேடுகிறேன்
உயிர் கொன்ற
என் வலிகளில் தேடுகிறேன்

கண்ணே ஒரு நாள்
மரணம் தழுவும்
அதனால் வருந்தவில்லை...
உன்னை காணும்
இன்பம் வரையில்
சாவில் விருப்பமில்லை...

பிரிவு என்ற ஒன்றே இன்றி
என்னை வாழவிடு...
அழியும் உலகில் அழியா காதல்
அன்பே தந்துவிடு...

No comments: