Visitors

free hit counter

Monday 12 January 2015

காவிரி கானல் நீர்...


ஊரும்  உறங்கிடிச்சி!
காடும்  காஞ்சிடிச்சி!
காவிரிக்கு  காத்து  காத்து..
காலமெல்லாம்  கழிஞ்சிடிச்சி!
ஊரு  சாபமின்னு
ஆத்தாவுக்கு  பொங்க  வச்சோம்!
வெளஞ்ச  நெல்லெல்லாம்
தெய்வத்துக்கே  போயிடிச்சி!..
அகதியா  போறதுக்கு
ஆழ்  மனசு  இடம்  தரல...
நாண்டுகிட்டு  சாகக்கூட
தைரியமில்லை...
நாள்  பூரா  காத்திருந்தும்
தண்ணி  வரல...
காவிரி  வாக்குவாதம்
கானல்  நீறு  போல  ஆச்சி...
அடுத்து  வரும்  தலைமுறைக்கு
ஆத்தா  வந்து  வரம்  தரணும்!..
காவிரி  பொய்த்தாலும்
வானம்  பொய்க்காம
மழை  தரணும்!....

No comments: