Visitors

free hit counter

Sunday 25 January 2015

சொல்ல வேண்டிய கதை-4


சில சந்திப்புகளுக்கு பிறகு...

மீண்டும் சந்தியாவை பார்க்க சத்யா புறப்படுகிறான். அப்பொழுது சேகர் இடைமறித்து,
"என்ன சார் இப்போலாம் அடிக்கடி அந்த பொண்ண பாக்க போறீங்க, என்ன லவ்வா"

சத்யா " ச்சீ, அதெல்லாம் இல்ல எனக்கும் யாருமில்ல, ஒரு ஆறுதலுக்கு பாக்க போறேன், அவ்ளோதான்,
நீ தப்பா நெனைக்கிற அளவுக்கு ஒண்ணுமில்ல. அதுமில்லாமே நாம அந்த மாதிரி பழகுனா தப்பா நெனைக்க
மாட்டாங்க."

சேகர்"அப்புறம் அடிக்கடி உங்கள பாக்க வேண்டிய அவசியமென்ன"

சத்யா"ஏன்? ஒரு நல்ல சினேகிதமா இருக்க கூடாதா?"

சேகர் " எல்லாம் சரி, ஆனா கடைசி வரை ஒரு பொண்ணும் ஆணும் நண்பர்களாகவே இருக்க முடியாது"

சத்யா " நாங்க இருக்க ட்ரை பண்றோமே"

சேகர் "சார், நீங்க இருப்பிங்க, அவளுக்கு கல்யாணம் ஆகிட்டா அவளுடைய வீட்டுக்காரர் ஒத்துக்கணுமே"

சத்யா "அப்போ பாக்கலாம், இப்போ ஆள விட்றியா டைம் ஆச்சு"

சேகர் " ஓகே சார் பாத்து பத்தரமா போயிட்டு வாங்க"

சத்யா"சரி சரி " என்று சொல்லி பஸ் ஏறி சென்றான்.

ஹாஸ்டலில்,

சந்தியா" எப்படியோ இத்தன நாளா பிளான் பண்ணது இன்னைக்கு முடிவுக்கு வரப்போகுது"

நிஷா " ஆமாண்டி, உங்கண்ண சொன்ன மாதிரி, திவ்யா சத்யான்ர பையன லவ் பண்றமாதிரி ஹாஸ்டல் பூராம்
பரப்பி விட்டாச்சு, இப்போ அவ ஆள் இல்லைனாலும் அவனோட ஓடி போன மாதிரி ஆகிடும்"

சந்தியா " அதனால தானே நேத்தே எங்கண்ண கூட அவள் அனுப்பி வச்சிட்டு, திவ்யா அப்பாவுக்கும் அவ வரலைன்னு
போனும் பண்ணியாச்சு, இப்போ சத்யா வரதையும் சொல்லியாச்சு, இனி அவனாச்சு அவுங்கலாச்சு நமக்கென்ன,
திவ்யா இப்போ சந்தோசமா எங்கண்ண கூட வேற ஊருக்கு போயிட்டு இருப்பா"

நிஷா " ஓகே டி இப்போ நாம என்ன பண்றது."

சந்தியா "வா பஸ் ஸ்டாண்டுக்கு போகலாம், அவன் வந்துட போறான்"

இருவரும் சேர்ந்து பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பி சென்றனர்..

பஸ் ஸ்டாண்டில்,

சத்யா பஸ்ஸை விட்டு இறங்கி சந்தியாவின் அருகில் செல்கிறான்.

சத்யா" ஹலோ சந்தியா, இன்னைக்கு என்ன ரெண்டு பேர்தான் வந்துருக்கீங்க, திவ்யாவ ஆளக் காணோம்"

சந்தியா "நடிக்காதடா, திவ்யா எங்க இருக்கானு சொல்லு"

சத்யா அதிர்ச்சி அடைகிறான்.
"என்ன சொல்றிங்க, திவ்யாவ பத்தி எங்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்."

நிஷா "டேய் அவள கொண்டு போய் நீதான் எங்கேயோ வச்சிட்டு, இங்க வந்து தெரியாத மாதிரி நடிக்கிற"

சத்யா "ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க, எனக்கொண்ணுமே புரியல"

சத்யா பேசிட்டு இருக்கும்போதே அவன் தலையில் யாரோ ஓங்கி அடிக்க நிலைகுழைந்து சரிந்து
கீழே விழுகிறான்...

-தொடரும்

No comments: