Visitors

free hit counter

Tuesday 20 January 2015

காதல் திருவிழா


நீ
கோவிலை ரசித்தாய்
கோவில் சிலைகளோ
உன்னை ரசித்தன..
---------------------------------------------
நீ
தேர் உலா
காண வந்தாய்
நானோ உன் உலா
காண வந்தேன்
----------------------------------------------
ஊர் கூடி
தேர் இழுத்தது
உன் நினைவுகள் கூடி
என்னை இழுத்தன.
----------------------------------------------
குழந்தைப் போல்
நீ உண்ணும்
பனிக்கூழிலில்
நானும் சேர்ந்து
கரைகிறேன்
----------------------------------------------
நீ
ராட்டினம் சுற்றி
இறங்கிப்போகிறாய்
நானோ
தலை சுற்றி
கிறங்கி விழுகிறேன்.
----------------------------------------------
வளையல்காரன்
உன் கைப்பிடித்து
இட்ட வளையளுக்காக
நான் இங்கு
உடைகிறேன்
-----------------------------------------------
நீ
சென்றதும்
கோவிலே வெறிச்சோடி
காணப்பட்டது.

உன் அடுத்த வருட
வருகைக்காக
நானும் கோவிலும்
தவம் இருக்கலானோம்...
-----------------------------------------------

No comments: