தனிமையில் தவிக்கிறேனே
காலத்தை கரைக்கிறேனே
இளமையை அழிக்கிறேனே
சுகம் சுகமாய்
பனியிலே குளிக்கிறேனே
பரவசம் அடைகிறேனே
உயிர் வலி சுமக்கிறேனே
அழகழகாய்
உன் பார்வையில்
எனை தொடும் போது
என் உயிரும்
உறைந்திடும் மாது
காதலை சொல்லி
இதயங்கள் ரெண்டில்
போரினை தந்தாயே
உன் அழகினில்
ஆயிரம் கோடி
தேவதை தோற்றது போடி
கலகங்கள் செய்து
தூக்கத்தை பறித்து
கனவினை தந்தாயே
No comments:
Post a Comment