நீயே வாழ்க்கை என்று
நானும் வாழ்ந்து விட...
காலங்கள் கரைவது உணரும்!
காதல் வந்து விட்டால்
காற்றும் கவி படிக்கும்...
நெஞ்சமும் தீபம் ஏற்றி சிரிக்கும்!
நீயின்றி வாழ சொன்னால்
நான் இறப்பேன் இறப்பேன்!
நிழல் கொஞ்சம் தருவாயானால்
மீண்டும் வந்து நானும் பிறப்பேன்!
நீ வரும் பாதை எங்கும்
நான் மலர்போல் மலர்வேன்!
நினைவோடு வாழச்சொன்னால்
நீண்ட ஆயுள் நான் இருப்பேன்!
என் வானின் நிலவே வா!
என் சுவாசக்காற்றே வா!
பூவோடு பனிப்போல
உன்னோடு நான் வாழ...
No comments:
Post a Comment