பிறந்திடும்
ஒவ்வொரு வார்த்தையும்
உனக்கென கொண்டு
எழுதி நான்
வைத்தேனே அடிக்கடி
உன்முகம் கண்டு!!!
புதுபுது
வலிகளும் மனதினில்
வந்தது ஏனோ?
விழி உன்னை
காணாத நாட்களில்
தவிப்பதால் தானோ!!!
காலமெல்லாம் காத்திருந்தேன்
கண்மணியே உன் வழியில்
பூமியெங்கும் பூத்திருக்கும்
பூக்களெல்லாம் உன் முகமே
விழிகள் கொண்டாடும் அழகே
தினமும் உருகாதோ மனதே
தோகை விரித்தாடும் மயிலே
தினமும் பொழியாதோ மழையே
எண்ணம் உன்னோடு
என்றும் அன்போடு
உன்னை சுற்றியே திரியும்!!!
No comments:
Post a Comment