Visitors

free hit counter

Monday 19 January 2015

காதல் வந்தது


பிறந்திடும்
ஒவ்வொரு வார்த்தையும்
உனக்கென கொண்டு
எழுதி நான்
வைத்தேனே அடிக்கடி
உன்முகம் கண்டு!!!

புதுபுது
வலிகளும் மனதினில்
வந்தது ஏனோ?
விழி உன்னை
காணாத நாட்களில்
தவிப்பதால் தானோ!!!

காலமெல்லாம் காத்திருந்தேன்
கண்மணியே உன் வழியில்

பூமியெங்கும் பூத்திருக்கும்
பூக்களெல்லாம் உன் முகமே

விழிகள் கொண்டாடும் அழகே
தினமும் உருகாதோ மனதே

தோகை விரித்தாடும் மயிலே
தினமும் பொழியாதோ மழையே

எண்ணம் உன்னோடு
என்றும் அன்போடு
உன்னை சுற்றியே திரியும்!!!

No comments: