என்னவள்..
வெண்ணிலா
தோன்றும் நேரத்தில்
என் காதல்
தேவதை ஞாபகம்!
பூக்கள்
தீண்டிடும் தென்றலே
என் இதயம்
அவளென்று சொல்லிப்போ!
வானத்தில் தூறிடும்
மழைத்துளி என்னவள்!
விண்மீன்கள் சிதறலில்
என்னவளின் புன்சிரிப்பு!
என் நெஞ்சம்
எங்கும் அவள் முகம்
அவள் காணா
காலம் காயம்படும்!
எனது சுவாசமே
உனது மடியினில்
சாக தோன்றுதே!!!
No comments:
Post a Comment