Visitors

free hit counter

Sunday 8 March 2015

யாரவளோ


உன் ஊரென்ன
உன் பேரென்ன
ஏதொன்றும்
என் காதல் அறியாதே

சிறு கண்ணாலே
எனை சிறை வைத்தாய்
என் கால்கள்
உன் பாதை அறியாதே

பெண்ணே! பெண்ணே!
உன்னாலே
என்னோடு
நித்தம் நித்தம்
போர் தான்....

வழி தேடி
அலைகின்றேன்
உன்னை பெற்ற
ஊர்தான்....

நீ நிலவா
மழையா
வாசப் பூவா
தேடி இங்கு
நான் தொலைந்தேன்...

என்னுயிரே! என்னுயிரே!
எனை வந்து சேராயோ
என் வாழ்க்கை நீயே தானே

ஒரு பொய் மானையே
இங்கு நான் தேடினேன்
இன்று நடுகாட்டில்
தவித்து நின்றேன்....

Sunday 1 March 2015

உடும்பு


மனம் ஒரு குரங்காம்
இடத்திற்கு இடம் மாறும்
என் மனம் மட்டும்
உடும்பை போல
பிடித்து கொண்டிருக்கிறதே
உன்னை....

அம்மன் சிலை


காதல் எனும்
கோவிலில்
புதியதாய் பிரதிஷ்டை
செய்யப்பட்ட
அம்மன் சிலை நீ.....