முள்ளென இங்கு
இருந்தவன்
உன்னால் பூக்களாகி
போனேன்
கல்லென இங்கு
வாழ்ந்தவன்
இன்று கடவுளாகிப்
போனேன்
என்னை
என்ன செய்தாய்
உள்ளம்
கொள்ளை செய்தாய்
உன்னை எண்ணி
மட்டும் வாழ்கிறேன்
தேவதை தரிசனம்
வேண்டுமே தினம் தினம்
காதல் சிறை ஒன்று
உன்னில் உள்ளதே
அதில் அகப்பட
நெஞ்சம் ஏங்குதே
என்னை உடன் வந்து
கைது செய்யடி
ஆயுள் முழுவதும்
அடைத்து கொல்லடி...
No comments:
Post a Comment