Visitors

free hit counter

Tuesday, 20 January 2015

காதல் வந்ததும்


முள்ளென இங்கு
இருந்தவன்
உன்னால் பூக்களாகி
போனேன்

கல்லென இங்கு
வாழ்ந்தவன்
இன்று கடவுளாகிப்
போனேன்

என்னை
என்ன செய்தாய்
உள்ளம்
கொள்ளை செய்தாய்

உன்னை எண்ணி
மட்டும் வாழ்கிறேன்

தேவதை தரிசனம்
வேண்டுமே தினம் தினம்

காதல் சிறை ஒன்று
உன்னில் உள்ளதே
அதில் அகப்பட
நெஞ்சம் ஏங்குதே

என்னை உடன் வந்து
கைது செய்யடி
ஆயுள் முழுவதும்
அடைத்து கொல்லடி...

No comments: