Visitors

free hit counter

Tuesday 20 January 2015

காதல் பெற்றேன்


உன் வாசங்களே
எந்தன் வாழ்வின்
மூச்சுக்காற்று
தினம் அதை தந்து
என்னை
வாழ வைப்பாய்

உந்தன் பார்வைகளை
வேண்டி ஏங்கும்
பக்தனானேன்
மோட்சம்தனை
தந்து என்னை
சாகடிப்பாய்

உன் நினைவுகளை
நிறுத்திவிட்டால்
உயிருடன் என்னை
புறக்கணிப்பேன்...
என் இதயத்திலே
உன் பெயரை
அடிக்கடி நானும்
துடிக்க வைப்பேன்...

காற்றினில் ஆடிடும்
உந்தன் ஆடை
எந்தன் பெட்டியில்
பொக்கிஷம்
என வைப்பேன்...
தேவதை நீ
சொல்லும்
ஒரு வார்த்தை
மூளைக்குள்
நான் வைத்து
அதை தைப்பேன்...

ஏனடி பெண்ணே
இங்கு வந்தாய்!
காதலை தந்து
என்னை வென்றாய் ...

No comments: