Visitors

free hit counter

Saturday 24 January 2015

சொல்ல வேண்டிய கதை-3


சத்யா பஸ்ஸை விட்டு இறங்கி அவர்களை நெருங்கி சென்றான்...

சத்யா" ஹாய் சந்தியா, எப்படி இருக்கீங்க"

சந்தியா " நல்லா இருக்கேன், நீங்க?"

சத்யா " நல்லா இருக்கேன், நீங்க வரமாட்டிங்கனு நெனச்சேன்"

சந்தியா "அதுதான் வந்திட்டேன்னே, அப்புறம் இவங்க என்னோட பிரண்ட்ஸ், இவ திவ்யா இவ நிஷா "

சத்யா "ஹாய்"

திவ்யா மற்றும் நிஷா ஒருசேர "ஹாய்"

சத்யா "வாங்க எதுனா சாப்பிட்டு கிட்டே பேசலாம்"

சந்தியா "சரி, வாங்க அந்த கூல்டிரிங்க்ஸ் கடைக்கு போகலாம்"

நால்வரும் கடைக்குள்ளே சென்று சிறுதுநேரம் பேசிவிட்டு வெளியில் வருகின்றனர்"

சந்தியா "சரி, இனி அடிக்கடி பாப்போம், இப்போ எங்களுக்கு ப்ராஜக்ட் விஷயமா பிரிண்ட் எடுக்கிற வேல இருக்கு"

சத்யா "ஓகே, நான் கிளம்புறேன்"

சத்யா சொல்லி விட்டு பஸ் ஏறி  செல்கிறான்.

சந்தியா "இவன் ரொம்ப வழியிராண்டி, இவன்தான் நம்ம விஷயத்துக்கு கரெக்டா இருப்பான்"

திவ்யா"பாவம்டி, வேணாம்டி"

நிஷா"ஹேய் திவ்யா, உனக்காகவும் சந்தியாவோட அண்ணனுக்காகவும் தானே இதெல்லாம் செய்ரா"

சந்தியா " திவ்யா, எங்கண்ணே சொன்ன மாதிரி தானே எல்லாம் பண்றேன். நீங்க நல்லா இருக்கணும்னா
இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும். உங்கப்பாவ மீறி கல்யாணம் பண்ணா எங்கண்ணன சும்மா விட்ருவாரா
உங்கப்பா, புரிஞ்சிக்கோ"

திவ்யா "சரிடி, இருந்தாலும் வேற ஏதும் பிரச்னை வந்துடாதா?"

சந்தியா "எங்கண்ணே தெளிவா சொல்லிட்டான், இவனுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமில்ல, ஏதோ ஒரு
ஆசிரமித்துல படிச்சு இங்க வேலைக்கு சேர்ந்துருக்கான். அதனால இவனுக்கு என்ன நடந்தாலும் இவன தேட ஒருத்தன்
வரமாட்டான்.அதனால நம்ம வேல ஈசியா முடிஞ்சிடும்."

நிஷா" சரிடி வாங்க போகலாம் இன்னும் நமக்கு கொஞ்சம் வேல பாக்கி இருக்கு"

சந்தியா " ஆமாம்டி, வாங்க"

மூவரும் சேர்ந்து ஹாஸ்டலுக்கு திரும்புகிறார்கள்...

-தொடரும்

No comments: