Visitors

free hit counter

Wednesday 28 January 2015

சொல்ல வேண்டிய கதை-6


சத்யா ஓடிக்கொண்டிருக்கும் போதே எதிரில் வந்த துணிக்கடையில் நுழைகிறான்...

தடியன்கள் அவனை அங்குமிங்கும் தேடி வேறு திசை நோக்கி ஓடுகிறார்கள்....சத்யா அப்பா என்று பெருமூச்சு விட்டு
திரும்புகையில் நிஷா அங்கு துணி எடுத்து கொண்டிருக்கிறாள்....

நிஷா கையில் ஒரு துணியை எடுத்து கொண்டு கடைக்காரரிடம்"சார் டிரைல் ரூம் எங்க இருக்கு"

கடைக்காரர்"அதோ அங்க இருக்கு" என்று சைகை காட்ட நிஷா நகர்கிறாள்.
சத்யா அவளை ஒரு உடைந்த ஹெங்கரை எடுத்துகொண்டு  பின் தொடர்கிறான்.
நிஷா  டிரைல் ரூம் சென்று கதவை சாத்த முற்படும் பொழுது, சத்யா இடைமறித்து அவன் கழுத்தில் கூரான ஹெங்கரை
வைத்து அவனும் உள்ளே சென்று கதவை தாழிடுகிறான்.

சத்யா"ஏண்டி என்ன அங்க பிரச்சனைல மாட்டிவிட்டு நீ இங்க சந்தோசமா இருக்கியா, ஒழுங்கா சொல்லு திவ்யா எங்கே?,
என்ன ஏன் இதுல மாட்டிவிட்டிங்க"

நிஷா பயத்துடன்"எனக்கு ஒண்ணும் தெரியாது, இது எல்லாமே சந்தியாவோட அண்ணன் சொல்லித்தான் செஞ்சோம்"

சத்யா"எங்கடி இப்போ அவன்?"

நிஷா"அவரும் திவ்யாவும் நேத்தே ஊட்டி  போய்ட்டாங்க, இப்போ சந்தியாவும் அவுங்கள பாக்கத்தான் போயிட்டு இருக்கா"

சத்யா"ஊட்டில எங்க இருக்காங்க"

நிஷா" எனக்கு தெரியாது"

சத்யா"ஒழுங்கா சொல்லு இல்ல இறக்கிடுவேன்"

நிஷா "ஊட்டில ஒரு காட்டேஜ்ல இருக்காங்க, என்ன கூட நாளைக்கு வர சொன்னங்க" என்று சொல்லி
அட்ரசை சொல்கிறாள்.

சத்யா" உன் மொபைல கொடு"
நிஷா எடுத்து கொடுக்க அவள் தலை முடியை கலைத்து விட்டு இவன் தலையையும் கலைத்து கொண்டு சட்டை பட்டனை
கழட்டி விட்டு திடீரென கதவை திறந்து ஓடுகிறான்.
அங்கு உள்ளவர்கள் அதை பார்க்க இவள் கலைந்த தலை முடியுடன் வெளியில் வருகிறாள்.
அங்கு கூடியிருந்த பெண்களில் ஒருத்தி" ச்சீ, ஒரு இடத்தையும் விட மாட்டேன்ராளுங்க" என்று காரி துப்ப, நிஷாவுக்கு பெரிய அவமானமாகிப் போக கூனிக் குறுகி நிற்கிறாள்...

சத்யா ஊட்டி பஸ்ஸை தேடி ஏறி அங்கு அந்த அட்ரசை தேடி அங்கு செல்கிறான்.
அங்கு சந்தியா ஒருத்தனோடு பேசுவதை மறைந்திருந்து பார்க்கிறான்.
சந்தியாவிடம் பேசிக்கொண்டிருந்தவன் திரும்ப சத்யா அதிர்ச்சி அடைகிறான்.

அது சேகர்!!!

-தொடரும்

No comments: