Visitors

free hit counter

Sunday, 11 January 2015

நெஞ்சள்ளி போனாளே


பூவில்  தூங்கும்  மகளோ
வானில்  காயும்  நிலவோ
எனை  தீண்டிச்செல்லும்
தென்றல்  காற்றோ

நீலக்குயிலின்  குரலோ
நான்  நெடுநாள்  கண்ட  கனவோ
எனை  வாட்டிச்செல்லும்
காதல்  சிற்பமோ

அய்யய்யோ  என்னை  கொல்ல
இவளும்  பிறந்தாளே

சிறகின்றி  வானில்  பறக்க
கற்று  தந்தாளே
 
கண்பார்வை  தீயாலே
என்  நெஞ்சை  சுட்டாளே
 
தேன்  சிந்தும்  புன்னகையால்
நெஞ்சள்ளி  போனாளே

No comments: