Visitors

free hit counter

Sunday, 25 January 2015

என் மனைவி


அன்னைக்கு ஆதரவாய்
அழைத்து வந்தேன்
அன்னைக்கு அன்னையாய்
நீ இருந்தாய்...

கதிரவன் எழும்முன்
நீ எழுந்து
கதிரவன் ஒளிந்த பின்னும்
நீ ஓயாமல்
உழைத்து கொண்டிருக்கிறாய்
அடுப்பங்கரை அனலில்....

மகனை பெற்றெடுத்து அவனுக்காய்
பேரனை பெற்றெடுத்து அவனுக்கும்
இரவு வேளைகளில் என்னுடனும்
உன் காலங்களை செலவு செய்கிறாய்
உனக்காக ஏதுமில்லாமல்....

வேலைக்கு போகும் எனக்கு
பணிக்கால ஓய்வு உண்டு...
நீயோ ஓய்வின்றி
ஓடாய் தேய்கிறாய்...

அதனால் தான்
நான் இன்னும்
கடவுளை தேடுவதில்லை
நீ என்னருகில் இருப்பதால்...

No comments: