Visitors

free hit counter

Saturday 31 January 2015

சொல்ல வேண்டிய கதை-7


சேகரை பார்த்ததும் பயங்கர அதிர்ச்சியும்  கோபமும் அடைகிறான் சத்யா.
அங்கு புல் வெட்டும் கத்திரிக்கோல் ஒன்றை எடுத்து அவனை நோக்கி புறப்படும் பொழுது
அவன் பின் பக்கம் ஒரு குரல் அவனை அழைத்தது. " ஹலோ யாரு நீங்க "

சத்யா திரும்பி பார்க்க அது திவ்யா. திவ்யாவும் இவனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்த முற்படும்பொழுது
கத்திரிக்கோல் கொண்டு அவளை மிரட்டுகிறான். " ஹேய் கத்துன கொன்றுவேன்"

"இந்தா இநத மொபைல உங்கப்பாவுக்கு போன் பண்ணு" என்று அவளிடம் கொடுத்து

" நான் சொல்ற மாதிரி சொல்லு" என்று சத்யா கூற, திவ்யா முதலில் மறுத்து பிறகு சரி என்கிறாள்.

"உன்ன சந்தியாவும் அவள் அண்ணனும் கடத்தி வந்ததாகவும் ஊட்டில வச்சிருக்க தாகவும் சொல்லு" என்று சத்யா சொல்ல சொல்ல திவ்யாவும் அப்படியே சொல்கிறாள்.

திவ்யா சொல்லி முடித்ததும் அவளை தலையில் ஓங்கி அடித்து மயக்கமடைய வைக்கிறான் சத்யா.

அவள் சுடிதாரின் ஷாலை எடுத்து அவள் கையையும் வாயையும் கட்டி பக்கத்தில் உள்ள புதரில் மறைக்கிறான்.

இப்போது சந்தியாவையும் சேகரையும் நோக்கி செல்கிறான்.

சத்யாவை பார்த்ததும் இருவரும் அதிர்ந்து நிற்கிறார்கள்.

சேகர் " நீ எப்டி தப்பி வந்த"

சத்யா"ஏன் செத்துருப்பேனு நெனச்சியா?, ஏன்டா இது மாதிரி லவ் பண்றேன் எனக்கு உதவி செய்யுங்கன்னு சொல்லிருந்தா
என் உயிரை கொடுத்தாவது செஞ்சுருப்பேன், இப்படி துரோகம் பண்ணிட்டியேடா"

சேகர் " எனக்கு வேற வழி தெரில, அதனால உன்ன சிக்க வச்சேன்"

சேகர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் காலில் அந்த கத்திரிக்கோலால் குத்தி விடுகிறான் சத்யா.
சந்தியா அலற அவளையும் தலயில் ஓங்கி அடித்து விட்டு,
சத்யா"இன்னும் கொஞ்ச நேரத்துல உன் மாமனார் வீட்ல இருந்து வருவாங்க அவனுங்க கிட்ட இத சொல்லு"

இருவரையும் ஒரு ரூமில் போட்டு தாழிடுகிறான். சத்யா திவ்யாவை ஒளித்து வைத்த புதரை நோக்கி செல்கிறான்.

சிறுது நேரம் கழித்து அங்கு திவ்யாவின் அப்பாவும் அவர் ஆட்களும் அங்கு வருகிறார்கள்.
வீட்டினுள் நுழைந்து சந்தியாவை பார்த்து,

தி.அப்பா " ஏண்டி கூடவே பழகிட்டு எப்டிடி இநத மாதிரி துரோகம் பண்ண முடியுது உங்களால"

சந்தியா" இல்ல அங்கிள் திவ்யா வந்து...."

தி.அப்பா" ச்சீ, வாய மூடு. எல்லாம் என் பொண்ணு சொல்லிட்டா, இப்போ ஒழுங்கா என் பொண்ணு எங்கேனு மட்டும்
சொல்லுங்க"

சந்தியா" தெரியாது அங்கிள்"

தி.அப்பா" டேய் இவுங்க ரெண்டு பேரையும் அடிச்சி உண்மைய வரவைங்கடா" என்று தன் ஆட்களை பார்த்து கூற,

அவர்கள் இருவரையும் போட்டு அடி பின்னுகிறார்கள்.

மூன்று நாட்களாகியும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காத வெறுப்பில் திவ்யா அப்பா, அவர்களை பார்த்து
" இனி உங்கள உயிரோட விடறது தப்பு, என் பொண்ண என்ன பண்ணிங்கன்னு எனக்கு தெரில, ஆனா மூணு நாளாச்சு அவ
உயிரோட இருப்பான்னு எனக்கு தோணல"

"டேய் இவுங்க ரெண்டு பேரையும் கொன்னு பொதச்சிடுங்கடா" என்று தன் ஆட்களை பார்த்து சொல்கிறார்.

அவர்களும் அவரவர் இடுப்பில் உள்ள கத்தியை எடுத்து அவர்களை நெருங்க, திவ்யா அப்பாவுக்கு போன் வருகிறது.

"ஹலோ"

"உன் பொண்ணு சாகுறதுக்குள்ள வந்து காப்பாத்திக்கோ"

" டேய் யாருடா நீ"

"அத உன் பொண்ணுகிட்ட வந்து கேளுடா"

"ஹேய் உன்ன சும்மா விட மாட்டேன்டா"

"அத அப்புறம் பாக்கலாம், இப்போ மூணு நாலா சாப்பிடாம உயிருக்கு போராடுற உன் பொண்ண வந்து பாருடா"

"எங்கடா வச்சிருக்க"

"உன் வீட்டு மாட்டு தொழுவத்துலடா"

என்று சத்யா சொல்லி விட்டு மொபைலை தூக்கி எறிந்துவிட்டு செல்கிறான்.

---முடிந்தது.

1 comment:

salaidhquickle said...

Casino, poker, and poker - DrmCDC
Find your casino table games in the palm of 서산 출장마사지 your hand. 과천 출장마사지 A world at play, filled with 목포 출장샵 table games and 구미 출장마사지 exciting casino games,  Rating: 오산 출장마사지 4.5 · ‎32 reviews