"சார் ஆர்குட்ல நெறைய பேக் ஐடி இருக்கு, நீங்க நம்பி போன் நம்பர் கொடுக்காதிங்க,
பசங்க கலாய்ப் பானுங்க." சேகர்
" விடு சேகர் நமக்கு கலாய்க்க தெரியாதா, இந்த பொண்ணு போட்டோலாம் போட்டுருக்கு,
யாருன்னு தான் பாக்கலாம்" சத்யா.
சத்யா MBA படிச்சிட்டு HR வேல பாக்குறான்...அவனோட பொழுது போக்கே சாட்டிங் தான்..
சேகர் சத்யாவோட அசிஸ்டண்ட்..தினமும் இவர்களுக்கு இது தான் வேலை..அப்படி தான் இன்று
ஒரு பெண் சாட்டிங் வரவும் அவனுடைய போன் நம்பரை கொடுக்கிறான்..
சத்யாவிற்கு இரவு ஏழு மணிக்கு ஒரு போன் அழைப்பு வருகிறது...
" ஹலோ யாரு பேசுறது" சத்யா
"நான் சந்தியா பேசுறேன், நீங்க சத்யா தானே"
"ஆமாம், என்ன விஷயம் சொல்லுங்க "
"என்னங்க, காலைல நீங்க தானே நம்பர் கொடுத்து பேச சொன்னிங்க"
"ஓ! நீங்கதானா, என் நண்பன் உங்க ஐடி பேக்னு சொன்னான்"
"அதெல்லாம் இல்ல, பசங்களோட டைம் லைன பாத்துட்டு முடிவு பண்ணிட்டு தான் பேசுவோம்.
உங்க ஐடி நல்லா இருந்தது. அதான் பேசுனேன். அப்புறம் என்ன பண்றீங்க"
" நான் ஒரு பிரைவேட் கம்பெனில HR வேல பாக்குறேன். நீங்க?"
"கோவைல ஒரு ஹாஸ்டலில் தங்கி நர்சிங் படிக்கிறேன்"
"எந்த ஹாஸ்டல்"
"எதுக்கு"
"சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான்"
"அந்த அளவுக்கு நாம பழகல. நல்லா பழகுனதுக்கு அப்புறம் பாக்கலாம்"
"சரி விடுங்க"
"சரி நானே கூப்டறேன், எதுனா மெசேஜ் மட்டும் அனுப்புங்க, ஹாஸ்டலில் போன் வச்சுக்க கூடாது,
நான் சைலன்ட்ல போட்டு வச்சிருப்பேன். நான் அப்புறம் பேசுறேன்"
"சரிங்க" சத்யா.
மறுநாள் சேகரிடம் சத்யா போன் வந்ததை பற்றி கூறுகிறான்.
"சார், நெஜமாவா என்னால நம்பவே முடில" சேகர்.
"நான் அப்பவே சொன்னேன்ல அந்த பொண்ணு போட்டோலாம் போட்டுருக்குனு.பேக் ஐடினு சொன்ன"சத்யா.
"சார், இருந்தாலும் பாத்து நடந்துக்கோங்க"சேகர்.
"அதெல்லாம் பயப்பட வேண்டியதில்ல, ஒரு பொண்ணே பயமில்லாம போன் பண்றா, நமக்கென்னடா"சத்யா.
சில நாட்களுக்கு பிறகு, சந்தியாவை சந்திப்பதாக முடிவு செய்து கோவை கிளம்பி செல்கிறான் சத்யா.
---தொடரும்
No comments:
Post a Comment