கண்கள் கரையுதே!
உள்ளம் உடையுதே!
உந்தன் வருகையின் ஏமாற்றம்....
காலம் ஓடுதே!
காதல் தேடுதே!
சுவாசம் எங்கிலும் உன் வாசம்.....
பூக்கள் வந்து
எந்தன் நெஞ்சை
ரணங்களாக்கி போகிறதே!
கனவில் வந்து
உந்தன் நினைவு
உயிரைத்தின்று போகிறதே!
இந்த காதல்
நெஞ்சில் வந்துவிட்டால்....
புது உலகம்
உள்ளுக்குள் தோன்றிவிடும்....
வாழ்க்கை மாறுதே!
வசந்தம் வந்ததே!
உள்ளம் எங்கும்
புது வலிகள்!!!
No comments:
Post a Comment