Visitors

free hit counter

Saturday 17 January 2015

யுகமொன்று அழிந்தாலும்...


உந்தன் நினைப்பில் இருந்தால்
நான் என்னை தேடுகிறேன்!

உந்தன் கனவில் படுத்தால்
நான் இன்பம் காணுகிறேன்!

உன் பார்வை தந்தாலே
நெஞ்செங்கும் தித்திக்கும்!

நீ என்னை தொட்டாலே
அங்கங்கள் பத்திக்கும்!

நீ சூடும்
ஒரு பூவினிலே
தேன் துளியாய்
நான் இருப்பேனே!

நீ பாடும்
பல ராகத்திலே
ஒரு வரியாய்
நான் இருப்பேனே!

யுகமொன்று அழிந்தாலும்
நீயின்றி நானில்லையே....... 

No comments: