Visitors

free hit counter

Tuesday 10 February 2015

நெஞ்சு பொறுக்குதில்லையே


விளை நிலங்களின் வீழ்ச்சியில்
விலை நிலங்களின் ஆட்சிகள்
பணத்தின் பிடியில் பாரத தேசம்
ஊழல்வாதிகளின் புழுகு மூட்டைகள்
ஆட்சி செய்பவனுக்கு சாதக சட்டங்கள்
பெண் குழந்தைகள் மேல் பாலியல் பலாத்காரங்கள்
மதத்தின் பெயரில் சுதந்திர இந்தியா
பட்டம் பெற்றும் வேலையில்லா திண்டாட்டங்கள்
கடவுளின் பெயரில் காமக் களியாட்டங்கள்
கூத்தாடிகளின் பின்னே உருப்படாத கூட்டங்கள்
ஒருவேளை உணவிற்காய் உயிர் மாய்க்கும் ஏழைகள்
திறமை இருந்தும் முயற்சி செய்யா முட்டாள்கள்
வேடிக்கை பார்க்கும் வெட்கங்கெட்ட ஜென்மங்கள்
மதுவிற்காக மானத்தை கூட்டிக்கொடுக்கும் மடையர்கள்

இத்தனை அவலங்களை கண்டும்
காணாமல் நிற்கும் கல்லான தெய்வங்கள்...
நெஞ்சு பொறுக்குதில்லையே
இனி ஒரு சுதந்திரம் வேண்டி
தனியே போராட
நெஞ்சில் தீரமில்லையே...

No comments: