நீயுமின்றி
நீ முதலா ? முடிவா ?
நெஞ்சம் தடுமாறுதே
முடிவென்றால்
என் வாழ்க்கை சருகாகுமே!
நீ கனவா ? நிஜமா ?
கண்கள் குளமாகுதே
கனவென்றால்
என் வாழ்க்கை பயமாகுமே!
உன் கால்களிலே ஒலிப்பது
கொலுசல்ல என் உயிர்தான்
என் கண்களிலே தெரிவது
உலகல்ல உன் முகம்தான்
உன்னை பிரிந்ததும்
இதயம் இறந்தது
உயிரும் அறுந்ததடி....
No comments:
Post a Comment