Visitors

free hit counter

Saturday, 29 November 2014

நல்ல நண்பன் வேண்டுமென்று.....


இனி அழ கண்ணீர் இல்லை
அத்தனையும் உன் சடலத்தில்
பன்னீராய் தெளித்து விட்டேன்..
நம் அழகான நினைவுகள்
சூரியன் கதிர் பட்டு
கரையும் பனிப்போல ஆனது
என் எல்லா துன்பங்களிலும்
இன்பமாய் இருந்தாய்..
உன் முகம் மூடும் சடங்கில்
என் மொத்த இன்பங்களையும்
மூடி கொண்டாய்.
கடவுள் ஒரு துரோகி
அவனுக்கு நல்ல நண்பன்
வேண்டுமென்று
உன்னை எடுத்து கொண்டான்
என் நட்பை பிரித்து விட்டான்...

No comments: