உன்னை பிரிந்த
என்னில் உயிரில்லையே
என் நிழலும்
எனக்கு இங்கு துணையில்லையே
ஒரு சொல் ஒரு முறை
அன்பே உன்னில் வாராதா
அடியே அதிலே
எந்தன் ஜீவனும் வாழாதா
பூக்கள் நீயல்லவா
உதிர்வது நானல்லவா
காற்று இல்லாமலே
நானும் வாழ்ந்திடுவேன்
நீயும் இல்லாமலே
எங்கே போய் தொலைவேன்
விழி மூடும் கனவில் கூட
விலகி செல்லாதே
உயிர் போக்கும்
மௌனம் கொண்டு
என்னைக் கொல்லாதே.....
No comments:
Post a Comment