Visitors

free hit counter

Tuesday, 25 November 2014

என்னைக் கொல்லாதே


உன்னை பிரிந்த
என்னில் உயிரில்லையே
என் நிழலும்
எனக்கு இங்கு துணையில்லையே

ஒரு சொல் ஒரு முறை
அன்பே உன்னில் வாராதா
அடியே அதிலே
எந்தன் ஜீவனும் வாழாதா

பூக்கள் நீயல்லவா
உதிர்வது நானல்லவா

காற்று இல்லாமலே
நானும் வாழ்ந்திடுவேன்
நீயும் இல்லாமலே
எங்கே போய் தொலைவேன்

விழி மூடும் கனவில் கூட
விலகி செல்லாதே
உயிர் போக்கும்
மௌனம் கொண்டு
என்னைக் கொல்லாதே.....

No comments: