விழிகளில் விழுந்து
இதயத்தில் நுழைந்தாய்
இதயத்தில் நுழைந்து
துடிக்க ஏன் மறந்தாய்?
அடிக்கடி உன்னை பார்ப்பது தெரியும்
முதல் முறை உன்னை
பார்த்ததும் என்னை
மறந்தது உண்மை
பெண்ணே உன்னால்
காதல் எனும் வாழ்க்கையை
நானும் இங்கு வாழ்கிறேன்
தருவாய் விழி பார்வை என்னிலே
மனமும் இங்கு பைத்தியம்
போலே எங்கும் அலையுதே
நீ வந்தால் கரையும்
எந்தன் யுகமே!...
கவிதை எழுதவே
கைகள் ஏங்குதே
விரல்கள் அனைத்தையும்
ஏனோ முறிக்கிறாய்
காதல் கோட்டையை
உடைத்ததேனடி
எந்தன் நெஞ்சையும்
நூறாய் உடைக்கிறாய்...
No comments:
Post a Comment