Visitors

free hit counter

Wednesday 26 November 2014

மூட நம்பிக்கை


அர்ச்சனை தட்டில் விழும்
பக்தனின் சில்லரையை விட
நோட்டுகளுக்குத்தான்
கவனிப்புகள் அதிகம்...
மூலைக்கொன்றாய் வளரும்
மரங்களின் நிழலும் கூட
வியாபாரமாக்கப்பட்டது
ஒரு ரூபாய் மஞ்சளும்
குங்குமமும் பூசப்பட்டு...
பல்லி விழுந்தாலும்
தடுக்கி விழுந்தாலும்
தடையென எண்ணும்
மூளையில்லா
முட்டாள்கள் அதிகம்.
நிர்வாணமாய் அலையும் ஊரில்
கோமணம் கட்டியவன்
கோமாளியாம்...
நானும் நிர்வாணமாக்கப்பட்டேன்!.

No comments: