Visitors

free hit counter

Monday 24 November 2014

எங்கே போனாயோ



பெண்ணே
நானும் அழுகிறேன்
அன்பில்லாமல்
தவிக்கிறேன்
நீயுமின்றி
துடிக்கிறேன்
நித்தம் நித்தம்
தொலைகிறேன்

நீயும் வாராமல் இன்று
எங்கு போனாயோ சென்று ஓடோடி
உன்னை காணாமல் நானும்
நொந்து நூலாகி போனேனே திண்டாடி

உன்னை
நானும் பார்க்கும் வரை
என் வாழ்வில் இன்பம் இல்லை
அந்த நொடி
எந்தன் நெஞ்சில்
நீதானே எந்தன் எல்லை

சுற்றி வந்த காலங்களை
என்னோடு நான் சுமந்தேன்
நீயும் இன்றி நான் நனையும்
காதல் மழையில் வெந்தேன்

அந்த எண்ணங்களை
காதல் சின்னமாய்
நான் இங்கு கொண்டேன்
எங்கு போனாயடி
உனக்காக வாழும்
என் உயிரையும்
கொண்டு போவாயோ!.....

No comments: