Visitors

free hit counter

Monday, 24 November 2014

ஏக்கம்


முத்தங்கள் தந்துதான்
உந்தன் குளிரை போக்குவேன்
கை விரல் தீண்டலில்
உன்னை மெல்ல கொல்லுவேன்

காமம் எல்லாம் தூர வீசி
குழந்தைப் போல
உன் நெஞ்சுக்குழி மத்தியிலே
துயில்வேன் மெல்ல

தாயைப் போல
தலையைக் கோதடி....

கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
என்னை தேடுற
நான் உந்தன் கருவிழியா?...
நெஞ்சுக்குள்ள தொட்டுப்பாரு
சத்தம் கேட்குமே
நான் உந்தன் உயிரில்லையா!...

பேசிப் பேசி
என்னை மயக்கி
சிக்க வச்சிட்ட
அன்பால பூட்டிக் கிடந்த
மனச இப்போ
உடைச்சிப் போட்டுட்ட

உன்ன எண்ணி
ஏங்கி சாகிறேன்.....

No comments: