பெண்:
உன்னை நம்பியே
உலகை வெறுத்தவள்
உயிரை வளர்த்தவள்
நான்தானடா
கோபம் கொண்டு நீ
அடிக்க பார்க்கிறாய்
உந்தன் காதலும்
பொய் தானடா
ஆண்:
மிருகமாவது மனித இயல்பு தான்
கோபம் கொள்வது வீண் தோழியே
அடி போடி பெண்மையே
என் காதல் உண்மையே
உயிரை கொடுத்து நான் நேசித்தேன்
பெண்:
காயம் பட்ட நான் மருந்து கேட்கிறேன்
மறுத்து போகிறாய் என் தோழனே
ஆண்:
மறுத்து போகவா நான்
உன்னை விரும்பினேன்
புரிந்து கொள்ளடி என் தேவியே
கண்ணீர் துளிகளை கண்ட நிமிடத்தில்
மடியக்கூடிடும் வலியை உணர்கிறேன்
மரணம் தொட்டு நான் வாழ்கிறேன்
No comments:
Post a Comment