ஒற்றை வார்த்தை சொல்லி
எந்தன் வாழ்வின்
வேரை அறுத்தவள்
கண்கள் ரெண்டில் தீயை வைத்து
உயிரோடு வதைத்தவள்
பூவை நீட்டி காதல் சொல்ல
புயலாய் என்னை அடித்தவள்
காதல் என்றால் என்ன என்று
புரியாமல் நடித்தவள்
மரணம் பெற்ற கைதி போல
தூக்கில் என்னை ஏற்றினாள்
துடிக்க துடிக்க சாகும் போது
கைகள் தட்டி ரசிக்கிறாள்
நரகத்தின் வேதனை
தினம் தினம் காண்கிறேன்...
No comments:
Post a Comment