Visitors

free hit counter

Sunday 30 November 2014

இது காதல் தானா


ஒற்றை வார்த்தை சொல்லி
எந்தன் வாழ்வின்
வேரை அறுத்தவள்

கண்கள் ரெண்டில் தீயை வைத்து
உயிரோடு வதைத்தவள்

பூவை நீட்டி காதல் சொல்ல
புயலாய் என்னை அடித்தவள்

காதல் என்றால் என்ன என்று
புரியாமல் நடித்தவள்

மரணம் பெற்ற கைதி போல
தூக்கில் என்னை ஏற்றினாள்

துடிக்க துடிக்க சாகும் போது
கைகள் தட்டி ரசிக்கிறாள்

நரகத்தின் வேதனை
தினம் தினம் காண்கிறேன்...

No comments: