Visitors

free hit counter

Wednesday 26 November 2014

காதல் தந்து போ


சாயங்கால வேளையிலே
உன் நினைப்பில் ஏங்கையிலே
ஏதேதோ எனை பண்ணுற...
உன்னுடைய பார்வையிலே
கண்டபடி நான் அலைய
கண்ணால வதம் பண்ணுற...
முறைச்சி பார்த்தாலே
நொறுங்கி போவேனே
சிரிச்சி போனாலென்ன...
உரசிப் போனாலே
உருகிப்போவேனே
தீண்டிப் போனாலென்ன...
கடும் பாறையால்
நெஞ்சம் ஆனதோ.
ஒரு தேரை போல்
நானும் ஊறவோ.
உன்னை சேராமல் போனாலே
என் வாழ்க்கை வீணாகுமே...

No comments: