தனிமை தருகின்ற
சுகமென்று நினைத்தேன்
தவிக்க செய்தாயடி
தாகம் தீர்க்கின்ற
நீராக நினைத்தேன்
அமிலம் பொழிந்தாயடி
உன் கண் பார்வை
கூரான வேல் தானடி
நான் தடுமாறி
விழுந்தென்னை
இழந்தேனடி
எனை எரித்தாலும்
என் தேகம் சாகாதடி
எனை ஏனோ
வெறுத்தாயே
இறந்தேனடி
என் காலம்
உனக்காக தான்
என்று நினைத்தேன்
காயம் தந்தாயடி
காதல் கருவாக்கி
நான் உன்னை
சுமந்தேன்
உயிரை அறுத்தாயடி
உன் பார்வைகள்
ஒவ்வொன்றும்
அனல் தானடி
எனை உயிரோடு
எரித்தாயே அது ஏனடி
உன் வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
விஷம் தானடி
உன் கடும் சொல்லால்
மண்ணோடு புதைத்தாயடி
No comments:
Post a Comment