பெண்ணே!
ஏன் உயிர் வேதனை
தந்தாய்!
பெரும் சோதனை
உன் விழி ஈர்ப்பு
விசை தன்னில்
எனை ஈர்க்கிறாய்
உன் இதழ் தீட்டும்
சிரிப்பு ஒன்றில்
எனை சாய்க்கிறாய்
நான் படும் துன்பம்
அதைக்கேட்டு
நீ ஓடி வா
உன் கரம் தந்து
எனை மீட்ட
நீ தீண்டி போ
உன் பார்வை
என்னில் பட்டால்
தடுமாறிப்போகும் மனமே
நீ என்னை
தாண்டி சென்றால்
என் உயிரும் செத்து விடுமே
நீ உந்தன்
காதல் தந்தால்
என் வாழ்வும் அர்த்தம் பெறுமே
No comments:
Post a Comment