Visitors

free hit counter

Tuesday, 6 January 2015

காதல் தேவதை



விழிகள்   ரெண்டில்  வசிப்பவள்
என்  இதயக்கூட்டை  கலைத்தவள்
குழந்தை  போல  சிரிப்பவள்
என்  இரவின்  தூக்கம்  கெடுத்தவள்
நிலவை  போல  இருப்பவள்
என்  மனதில்  நுழைந்து  வதைப்பவள்
செவ்விதழில்  என்னை  வளைத்தவள்
உயிர்க்காதல்  எனக்கு  கொடுத்தவள்
பூவிழி  பார்வையில்  பூக்கொடுத்தாள்
தீண்டும்  விரலில்  தீக்கொடுத்தாள்
தேவதை  போலவே  தேடி  வந்தாள்
புது  வாழ்க்கை  தான்  கொடுத்தாள்

No comments: