Visitors

free hit counter

Wednesday, 7 January 2015

போதும் கண்ணே..


மௌனம்  மட்டும்  பேசும்  பெண்ணே
வார்த்தை  ஒன்று  சொன்னால்  என்ன
காலமெல்லாம்  காத்திருப்பேன்  உனக்காக

தோட்டம்  வீசும்  தென்றல்  காற்றே
பூவை  ஏனோ  தீண்டவில்லை
காதலின்றி  நான்  இறப்பேன்  இப்போதே

வானிலே  உன்  ஊர்வலம்
அடி  பெண்ணே  நிலவாக
வாழ்கிறேன்  உன்  நினைவினில்
என்  கண்ணே  நிஜமாக

பார்வை  ஒன்று  பார்க்க  வேண்டும்  காதலியே
தீயுமின்றி  வேகிறேன்   இந்த  காதலிலே

போதும்  கண்ணே  நீ  நிறுத்து
உன்  நாடகத்தை...

தூக்கமின்றி  தேடுகிறேன்
என்  ராத்திரியை....

No comments: