Visitors

free hit counter

Wednesday, 7 January 2015

நீயின்றி உயிர் இழக்கிறேன்!!!


நிலவாய்  சிரிக்கிறாய்
துயிலை  கெடுக்கிறாய்

மலராய்  பூக்கிறாய்
மனதை  கொள்ளையடிக்கிறாய்

மயிலாய் பறக்கிறாய்
மழையாய்  விழுகிறாய்

குயிலாய்  இசைக்கிறாய்
அமுதாய்  இனிக்கிறாய்

வலையை  விரிக்கிறாய்
இதயம்  பிடிக்கிறாய்

இமைகள்  இரண்டையும்
கனவில்  பறிக்கிறாய்

உந்தன்  நினைவிலே
காலம்  அழிக்கிறாய்

காதல்  கொடுக்கிறாய்
உயிராய்  இருக்கிறாய்

சிரிக்கிறேன்  தினம்  பூக்கிறேன்
பறக்கிறேன்  எனை  மறக்கிறேன்
நினைக்கிறேன்  உன்னை  இசைக்கிறேன்
உன்  வழி  மலர்  விரிக்கிறேன்
நீயின்றி  உயிர்  இழக்கிறேன்!!!

No comments: