Visitors

free hit counter

Thursday, 8 January 2015

என் ஜீவனும் வாழாதடி


என்  வானம்  தொடுகின்ற  வென்மேகமோ  
என்  சுவாசம்  தருகின்ற  பூந்தேன்றலோ
உன்னாலே  என்  பாவமும்
இன்றோடு  முடிகின்றதே
என்  வாழ்வும்  ஒளிர்கின்றதே
பூவே  பெண்  பூவே  பார்த்தால்  என்ன
காற்றாய்  தொடும்போது  சிரித்தால்  என்ன

மின்னல்  போலவே  நீ
என்னை  கடந்தாய்
உன்  புன்னகையால்  என்  மனதை
கொள்ளை  கொண்டு  போனாய்
பார்வையிலே  எந்தன்  இரவுகளை
அடி  நித்தம்  நித்தம்  கழுமரம்
ஏற்றி  நீயே  கொன்றாய்
தேவதை  போலவே  நீ  இங்கு  வந்தாய்
என்  நெஞ்சில்  மழைச்சாரல்  தூறுதே
நிலவா?  ஒளியா?
என்னவென்று  சொல்ல...

உச்சிவெயில்  கூட  குளிர்கின்றதே
அடி  உன்னழகை  காணும்போது
கண்கள்  போனதே
பனிக்காலமும்  இங்கு  வேர்த்து  கொட்டுதே
உந்தன்  பார்வை  தாக்கும்  போது
நெஞ்சம்  போனதே
பெண்மகள்  நீயும்  என்  வழி  வந்தால்
மலர்களாய்  பாதத்தை  தாங்குவேன்
பாராமலே  போகாதடி
என்  ஜீவனும்  வாழாதடி!!!

No comments: