காதல் தந்தாய்
காற்றில் நானும்
மிதந்திருந்தேன்
காலம் எல்லாம்
உன் நினைவில்
நான் இருந்தேன்
அழகாக நீ சிரித்தாய்
தனியாக பேச வைத்தாய்
பூக்கள் ஏந்தி உந்தன் வழி
நான் இருந்தேன்
காத்திருந்து கால் வலிக்க
நான் நகர்ந்தேன்
புயல் போல நீயும் வந்தாய்
வலி கூட மறைய வைத்தாய்
வானவில்லை போல் வாழ்க்கையில் வந்தாய்
வண்ணங்களால் மகிழுகிறேன்
காற்றாய் வந்துதான் சுவாசம் நிறைந்தாய்
உன்னால் நானும் வாழுகிறேன்
வெயில்கூட ரசிக்க வைத்தாய்
மழையோடு கரைய வைத்தாய்
தனியாக நான் இருந்தால்
நினைவாலே இனிக்க வைத்தாய்
உன்னிடத்தில் நான் பேசும் போதெல்லாம்
உலகத்தை மறந்துவிட்டேன்
உன்னை மட்டும் நான் நினைக்கையிலே
என்னையே தான் மறந்துவிட்டேன்
இமையோடு நீ இருந்தால்
இமைக்காமல் நான் இருப்பேன்
நீயின்றி நான் இருந்தால்
உயிரின்றி நான் இறப்பேன்....
No comments:
Post a Comment